ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

8 mkj
8 mkj

நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் நீராடச் சென்ற போதே இவ்வாறு 03 பேரும் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும், மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

38 வயதுடைய தந்தை, அவரின் மகளான 12 சிறுமி மற்றும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.