அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் இருவர் பலி

6 ad 1
6 ad 1

லொறியொன்றின் மீது அதி உயரழுத்தம் கொண்ட மின் கம்பி விழுந்ததில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் மாத்தளை, மகாவில பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் ஒன்றின் கிளை முறிந்து குறித்த அதி உயரழுத்தம் பொண்ட மின்கம்பி மீது விழுந்ததிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.