முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம்

0.90 2
0.90 2

இலங்கையில் முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் காலி கடலில் இந்த நீருக்கு அடியிலான நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதனை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவினால் காலி கடலில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கடற்படைத் தளபதியின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

விசேடமாக உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய காலி கடற்கரையை மையப்படுத்தி இந்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட உருவங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நீருக்கு அடியிலான இந்த அருங்காட்சியகம் காலி துறைமுகத்தினுள் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.