வைத்தியர் சாஃபி ஷியாப்தினுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கு!

court 2
court 2

வைத்தியர் சாஃபி ஷியாப்தினுக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் (26) ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று(25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 41 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையை குருநாகல் பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம்மிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.