இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

iWJFwKnNPaExFuDLG5WcFC

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதில் நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,037 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியமை கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.