எம்.சி.சி ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குழு அறிக்கையில் கடந்த அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் ஐ.தே கட்சி இதன் போது நிராகரித்திருந்தது.