கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையானது சரியான தீர்மானமே!

0000000 2
0000000 2

கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையானது சரியான தீர்மானமே என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிடும் கருத்துக்களின் ஊடாக தெளிவாக புலப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (29) முற்பகல் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.