இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா விளையாட்டு தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவில் முன்னிலையாகி ஐந்தரை மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறியுள்ளார்.
கடந்த (2011) ஆம் அண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி பணத்திற்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அழுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.