மேலும் 6 கடற்படையினர் பூரண குணம்

1593574019 NAVY 2

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 842 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 904 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 62 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.