கஞ்சிப்பானையின் சிறைக் கூடத்தில் சிக்கியது தொலைபேசி!

1 25
1 25

கஞ்சிப்பானை இம்ரான் சிறை வைக்கப்பட்டுள்ள பூஸா சிறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அவரது சிறைக் கூடத்திலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பூஸா சிறையின் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், குறித்த கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், சிறை வைக்கப்பட்டுள்ள இலக்கம் (03) சிறைக் கூடத்திலிருந்து ஒரு அன்ட்ரொய்ட் வகை கையடக்கத் தொலைபேசி, சார்ஜர் (01), சிம் அட்டைகள் (04) ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.