தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களைக் கைப்பற்றும் – சுஜீவ

54a251cfcf6258a48738cd5187dd16b6 XL

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

தேர்தலில் வென்ற பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சில ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் பயணத்துக்காக மக்களில் சிலர் அடிமைகள் போல் செயற்பட்டு இனவாதத்தைத் தூண்டுகின்றனர்.

எனினும், மக்கள் இனவாதத்தையும் போலித் தேசப்பற்றையும் நிராகரிப்பார்கள். ஒரு தேசமாக செயற்படுவார்கள்.

காடையர்கள், கப்பம் பெறுபவர்கள், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களைப் பொதுத்தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கியுள்ளனர்” – என்றார்.