பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல் ஒன்றுக்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் (03) துறைமுக ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.