ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர் .

unnamed 2
unnamed 2

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் நரிடா விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ள 261 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.