வடக்கின் பல பாகங்களில் இன்று மின்சாரம் தடைப்படும்- மின்சாரசபை

power cut 1
power cut 1

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், அம்பனை, Elephant Metal Aluminium Works(Pvt) Ltd Ampanai, நீர்வேலிச் சந்திப் பிரதேசம், சிறுப்பிட்டி, குளப்பிட்டி- ஆனைக்கோட்டை வீதி, தமிழ்க்கலவன் பாடசாலை, வராகி, சாவல்காடு, காக்கைதீவு ஒரு பகுதி, ஆனைக்கோட்டை, ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயிலடி, கலையரசி வீதி, சென்பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கைப் பிள்ளையார் கோவிலடி,  அட்டகிரி, நவாலி, தாளையடி , வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், கட்டைக்காடு, கேவில் முள்ளியான் இராணுவ முகாம், கட்டைக்காடு 55 ஆவது டிவிஷன் இலங்கை இராணுவத் தலைமையகம், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தாளையடி ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.