பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை

d 2

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இதன்போதே, சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள், அறிவித்தல் பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 1,500 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களில் நிறுவப்படவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொதுத்தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.