இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பிரதேசத்துக்குட்பட்ட இளைஞர்களை சந்தித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிறாய்வா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடம்பன் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றுகையில் தமிழர்கள் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டிய தேவை தொடர்பாகவும் தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணையவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் மற்றும் எதிர்வரும் தேர்தல் பற்றிய தெளிவூட்டல்களையும் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தினார்.