நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து நபர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத சில நபர்களினால் கூரிய ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக, கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மிட்டியாகொட – களுபே பிரதேசத்தினை சேர்ந்த (29) வயதுடைய நபர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த (04) நபர்களே இவ்வாறு தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.