வவுனியாவில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டது

Three car VLocity VL38

வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று இன்று புதன்கிழமை (08) காலை வவுனியாவில் அவுசதபிட்டி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு புகையிரத மார்க்கத்திலான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு – கோட்டைக்கு செல்லும் புகையிரதம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் தாமதமாக பயணிக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகையிரத போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டுள்ளன.