இலங்கையில் சிக்கியிருந்த 153 பேர் இந்தியாவுக்குப் பயணம்

160716 airindia
160716 airindia

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 153 பேர் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை 9.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர்கள் புதுடில்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கட்டுமானம் மற்றும் ஏனைய தொழில்களில் ஈடுபடும் குழுவினரே இவ்வாறு புதுடில்லி நோக்கிப் பயணித்துள்ளனர்.