கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி தொடர்பில்!

asd1 1
asd1 1

நாட்டின் ஹோமாகம – பிடிபன பாதாள ஆயதக்கிடங்கு சம்பவம் தொடர்பில் மேலும் ரீ-56 ரக இரண்டு துப்பாக்கிகள் பிடிபன வடக்கு பகுதியின் காவல்துறை காண்ஸ்ரபிளின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த காவல்துறை உத்தியோகத்தர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரிடம் இன்று முன்னெடுக்கப்பட விசாரணையில் ரீ-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 750 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – பிடிபன பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் கடந்த 29 ஆம் திகதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த சோதனையின் போது அங்கு ரீ-56 ரக 11 துப்பாக்கிகள் மற்றும் ரீ-81 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த துப்பாக்கிகள் அனைத்தும் தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள குழு தலைவரான கொஸ்கொட தாரக எனப்படும் தாரக பெரேரா விஜேசேகரவினுடையது என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.