பிரதிநிதிகள் விசாரணைகளுக்காக கிழக்கில்!

amparai
amparai

நாட்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் செய்தனர்.

அங்கு தற்கொலைத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் ஹஷீம் உள்ளிட்ட ஏனைய தற்கொலைத்தாரிகள் பலர் நடவடிக்கைகள் மேற்கொண்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்.

இதுவரையில் குறித்த ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த விஜயம் அமைந்திருந்தது.

இதன்போது, அவர்கள் நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.