கஞ்சிபான இம்ரானின் ஆலோசனையின் பேரில் துப்பாக்கி பிரயோகம் ;நபர் ஒருவர் மரணம்!

download 4 3
download 4 3

நாட்டின் மாளிகாவத்தை – லக்ஸத்த செவன குடியிருப்பு தொகுதியில் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானின் ஆலோசனையின் பேரில் குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான உக்ஷான் எனப்படும் பமுனு ஆராய்சிகே ருக்ஸான் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் கொட்;டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.