மேலும் இருவர் அடையாளம்!

@ 1
@ 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2651ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 652 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 1988 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.