வேட்பாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வலியுறுத்து!

mahinda deshapriya
mahinda deshapriya

நாட்டின் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ள சில தேர்தல் முறைப்பாடுகள் குறித்து தாம் கவலையடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் இன்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வேறு எந்த பகுதிகளை விடவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சின்னங்கள் மற்றும் இலக்கங்கள் என்பன பெருந்தெருக்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

இது தேர்தல் சட்டங்களுக்கு முரணானதாகும். ஆகவே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளை மற்றும் வேட்பாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் பணிகளில் காவல்துறையினரை மாத்திரம் ஈடுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடிவருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.