நாட்டின் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இரண்டாவது நாளாக இன்று இடம் பெற்றுள்ளது.
சகல காவல்துறையினர், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.