நேற்று அடையாளம் காணப்பட்ட 19 தொற்றாளர்கள் பற்றிய விபரம்

02 7

இலங்கையில் நேற்று செவ்வாய்கிழமை (14) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,665 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 9 பேர், சேனபுர மையத்தில் 4 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேர் என மொத்தம் 19 பேருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 666 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,988 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.