தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

1572854153 election comm 2
1572854153 election comm 2

விசேட கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) பிற்பகல் கூடவுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹீல் இதுவரை சமூகமளிக்காமை காரணமாக குறித்த சந்திப்பு சில மணித்தியாலங்கள் தாமதமாகலாம் என ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்போடப்பட்டுள்ள ராஜாங்கனை பிரதேச செயலக பிரிவின் அஞ்சல்மூல வாக்களிப்பினை நடத்துவது மற்றும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிரவேசித்துள்ளனர். பொது தேர்தல் குறித்த சுகாதார வழிமுறைகள் இதுவரை வர்த்தமானியில் அறிவிக்காமை மற்றும் தேர்தலின் போது குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு சுகாதார பரிசோதகர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகிறது. அரச நிறுவனங்களில் சேவையாற்றும் சேவையாளர்கள் நேற்றைய தினம் வாக்களித்திருந்த நிலையில் இன்றைய தினமும் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது