முதலை கடித்து பரிதாபமாக சிறுமி உயிரிழப்பு

unnamed 15 1
unnamed 15 1

தாயுடன் நீராடச் சென்ற சிறுமியை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று மீகலேவ – யாய பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் முதலையினால் இழுத்து செல்லப்பட்ட சிறுமி பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி மூன்றரை வயது என்பதுடன் உஸ்கல – சியம்லன்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.