வட மாகாணத்தில் இன்று மின் தடை ஏற்படும்

download 3 1
download 3 1

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.00மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.நெடுங்குளம், மணியந் தோட்டம், ஹெலன் தோட்டம், உதயபுரம், Infantas Ice Solutions பிறைவேற் லிமிற்ரெட், கொழும்புத்துறை வீதி, AV வீதி, துண்டி, மந்திகை உபயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் தேசிய நீர்ப்பாசனசபை, டொக்யாட் முல்லை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல வவுனியா மாவட்டத்தில்- தவசிக்குளம் கிராமத்திலும் மின்சாரம் தடைப்படும்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை சீனத்துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிக்குளம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், தரவன்கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக் தொலைத்தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிக்கப்படும் எனவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.