131,527 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முடிவுகள்!

1588663756
1588663756

நாட்டின் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட விசேட செயலணியின் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாட்டில் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுள்ள பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 131,527 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.