10 மணி நேர நீர் வெட்டு கொழும்பின் பல பகுதிகளில்!

a49136bd4592e64ede30acaca26a94df XL
a49136bd4592e64ede30acaca26a94df XL

நிலத்தடி நீர் வழங்கும் குளாயின் திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம் கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக
தேசிய நீர் வழங்கங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு 13,14 மற்றும் கொழும்பு 15 அகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 11,12 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.