இலங்கையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க தொல்பொருள் ஆலோசனைக் குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட குறித்த ஆலோசனைக்கு குழுவில் 20 உறுப்பினர்கள் அடங்குவதாக என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொல்பொருள் இடங்கள் தொடர்பாக இந்த மாதத்திற்குள் பிரதமரால் நியமிக்கப்படும் இரண்டாவது குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.