தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மிக மோசமான தேர்தல் இது!

IMG 0985
IMG 0985

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மிக மோசமான தேர்தல் ஒன்று தமிழர் மீது திணிக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் இருந்து தான் ஒதுங்கியுள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தற்கால தேர்தல் என்பது பதவி படிப்பிற்கான கீழ்த்தரமான போட்டியாக மாறியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எனக்கும் பிரச்சினை இருப்பதாக ஒரு கதை நிலவுகிறது ஆனால் அது உண்மை அல்ல.

இன்று தேர்தல் அரசியல் மக்களை சாதி ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக கூறுபோட்டு ஒற்றுமையை குலைத்திருக்கிறது.

மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலை அரசியலை முன்னெடுக்கும் மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2020 07 30 at 23.50.08