அனுராதபுரம், ராஜாங்கனை பகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம்

RAJANGANAYA1
RAJANGANAYA1

கொவிட்-19 தொற்று காரணமாக அனுராதபுரம், ராஜாங்கனை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளானது இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

எனினும் கடந்த 19ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை. ராஜாங்கனை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டே சுகாதார அதிகாரிகளின்  ஆலோசனைக்கு அமைவாக பயணக்கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.