நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா

JAFFNA 31.07.2020 NALLAIKUMARAN NUL VELIJEDU Moment

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகார குழுவின் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வு நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினால் வருடந்தோறும் நல்லூர் முருகன் ஆலய உற்சவகாலத்தில் வெளியிடப்படும் “நல்லைக்குமரன்” நூல் வெளியீடும் , “யாழ் விருது “வழங்கும் நிகழ்வும் நாட்டில்தற் போதுள்ள கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறையினை பின்பற்றி யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது.

 யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவின் தலைவரும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளருமான த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில்  நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன்  யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள்  சைவ சமய குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ghh

நிகழ்வில் யாழ்விருது நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக சுவாமிகள் சைவ சமய விவகார குழுவினால் இவ் வருடத்திற்கான யாழ் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட கவிஞர் சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவித்தார்  பொற்கிளியினை யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் வழங்கி வைத்தார் 

தொடர்ந்து நல்லைக்குமரன் மலர் வெளியிடப்பட்டது நல்லைக்குமரன் மலர் முதல் பிரதியினை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பிரதிநிதி பெற்றுக்கொண்டார் குறித்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண மாநகரசபை துணை முதல்வர் கலந்து கொண்டு சிறப்பித்தார் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா கலந்து கொண்டிருந்தார்…. நிகழ்வில் யாழ் விருதினைப் பெற்ற கவிஞர் சோ.பத்மநாதன் ஏற்புரையினை நிகழ்த்தியிருந்தார்