வவுனியா உளுக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.