வெளிநாடு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த வன்னி மாவட்ட வேட்பாளர் மீது வழக்கு

116614765 422925495259482 8531654215227663671 n
116614765 422925495259482 8531654215227663671 n

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளரும். மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினருமாகிய பகிரதன் மீது இன்றைய தினம் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது வெளிநாடு அனுப்புவதாக கூறி பணம் பெற்று வெளிநாடு அனுப்பாது பணத்தை திருப்பி மக்களிடமும் வழங்காது ஏமாற்றி வந்த இவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணத்தை வழங்குவதாக கூறி இழுத்தடிப்பு செய்த நிலையில் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது நீண்ட நாட்களாக பணத்தை தருவதாக ஏமாற்றியதன் காரணமாக பணத்தை வழங்கியவர் ஏமாற்றம் அடைந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் இவருக்கு வங்கியில் பணம் வைப்புச் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன நாளை அல்லது நாளை மறுதினம் இவர் கைது செய்யப்படலாம் என அறிகின்றோம்.

இவர் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவாராக கூறப்படுகிறது இவ்வாறான மோசடிக்காரர்கள் தேர்தலில் போட்டியிடுவது அரசியலின் பிற்போக்குத்தனமான நிலையை வெளிகாட்டுகின்றது இவ்வாறான மோசடிக்காரர்கள் பாராளுமன்றம் சென்றால் இலகுவாக மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது