ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் தங்காலை நகரில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம் பெறும் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்வார்கள்.
தங்காலை நகரில் இடம் பெறும் இறுதி கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.