நாட்டின் அநுராதபுரம் – ராஜாங்கனை பகுதியில் விதிக்கப்பட்டு இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக போடப்பட்ட கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கடந்த 27ஆம் திகதி குளுந்தேகம, சிறிமாபுரபிரிவு 01 (சந்தை பின் பகுதி தவிர்ந்த), பிரிவு 02 என்பன கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிரதேசங்களாக உள்ளன.
இதையடுத்து இன்று 01,03, 05, 06 ஆகிய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.