மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற புனித ஹச் பெருநாள் விசேட தொழுகை

P2100142 696x392 1

புனித ஹச் பெருநாள் விசேட தொழுகைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றது.

மூர்வீதி ஜீம்மா பள்ளி வாயலில் மௌவி எம்.அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

பெண்களுக்கான சிறப்புத் தொழுகை காலை 7 மணிக்கும் ஆண்களுக்கான தொழுகை காலை 7.45 மணிக்கும் இடம் பெற்றது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாயல்களிலும் பெருநாள் தொழுகைகள் சுகாதார முறைப்படி சமூக இடைவெளிகளை பேணி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.