குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக 14 பெண் தொழிலாளர்கள்!

kathandu
kathandu

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 14 பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது

இந்த சம்பவம் நோர்டன் பிரிட்ஜ்-ஒஸ்போன் தோட்டம்-க்ரவென்டன் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குளவி கூடு ஒன்று கலைந்ததன் காரணமாகவே இவ்வாறு குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.