கொழும்பு 05, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் சில பிரிவுகள் எதிர்வரும் 04, 05 ஆம் திகதிகளில் பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல்கள் செயற்பாடுகளுக்காக கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்குள், கொழும்பு கிழக்கு தேர்தல் பிரிவிற்குரிய 06 மற்றும் 07 இலக்கங்களைக் கொண்ட வாக்கு நிலையங்கள் தாபிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களமானது, பொதுவான அலுவலகக் கடமைகளுக்காக திறக்கப்படாது என்பதை, சேவை பெறுநர்களுக்கு அறியத்தருவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே. அலஹ தெரிவித்துள்ளார்.