கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்த கலந்துரையாடலானது தங்காலையில் அமைந்துள்ள ஹால்டன் இல்லத்தில் ஆரம்பமானது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.