மேலும் ஒருவர் அடையாளம்!

@@
@@

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2514 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் 291 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.