வவுனியாவில் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

20200803155212 IMG 9594

பகல் நேரப் பராமரிப்புடன் கூடிய முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டிருந்த வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மத வழிபாடுகளின் பின்னர் அடிக்கல்லை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.
குறித்த செயற்திட்டமானது மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் நிதிஒதுக்கீட்டிலும், வவுனியா மாவட்ட செயலகத்தின் பங்களிப்புடனும் அமைக்கப்படவுள்ளது.

5 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் இங்கு அனுமதிக்கப்படவுள்ளதுடன், மாவட்ட செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் நிர்வாகத்தினரால் அதன் பணிகள் முன்னெடுக்கப்படும்.
நிகழ்வில், மாவட்டசெயலகத்தின் கணக்காளர் பால்ராஜ், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வில்வராயா, பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் சபாலிங்கம், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன்,  பிரதேச செயலாளர் ந.கமலதாசன்,  சிறுவர் நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, அபிவிருத்தி உத்தியோயகத்தர் ச.சுபாசினி, மதகுருமார்கள் கலந்துகொண்டனர்.