கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) (03) நாடு திரும்பியுள்ளனர்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் உள்ள கப்பலொன்றில் பணியாற்றிய இலங்கை பணியாளர்கள் 13 பேர் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதே போல ஜப்பானில் இருந்து வருகை தந்த ஒருவரும் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.