முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொது செயலாளருமான எம்.எஸ் செல்லசாமியின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொது செயலாளரான எம். எஸ் செல்லசாமி கடந்த முதலாம் திகதி தனது 93 வயதில் காலமானார்.
இந்தநிலையில், அன்னாரின் பூதவுடல் கொழும்பு 7, புளஸ்லேனில் உள்ள இலக்கம் 50 இல் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர் பொரளை பொது மயானத்தில் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.