சட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு

download 5
download 5

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததன் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 940 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “கடந்த இரண்டு மாதங்களில்,  சமூக வலைத்தளங்களில் தேர்தல் சட்டங்களை மீறிய 3444 சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

சுகாதார சட்டங்களை மீறி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை தொடர்பாக  2483  முறைப்பாடுகளும் மேலும் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பாக  30 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன.

அத்துடன் 75 துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் 45 பெண் வேட்பாளர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.