ஹெரோயினுடன் இளைஞர் கைது

3317b2940a002299975e48c3da332f4f

முல்லேரியா பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரோன் திலகானந்த மாவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 10 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.