தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கான எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய கட்சிகளின் செயலாளர்களிடம் இருந்து இதற்கான பெயர் பட்டியலை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் அமைதியைப் பேணுமாறு வேட்பாளர்களிடமும் மக்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.